சிறுவர் பூங்கா விடுவிப்பு
வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காங்கேசன்துறை மத்தி கிராம அலுவலர் (J/234) பிரிவில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ( 6.9 பேர்ச்) இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து மக்களின் பாவணைக்காக மீளவும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரத்தை இன்று காலை (10.06.2019) எமது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களிடம் 515 படைப்பிரிவின் மக்கள் விவகார அதிகாரி கே. சத்யபால RSP அவர்களினால் உத்தியோகர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.
















