News & Events
- විස්තර
கலாசார விழா - 2019
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார விழா 2019 மிகச் சிறப்பாக 04.10.2019 வெள்ளிக்கிழமை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு. சண்முகராசா சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு. இ. இளங்கோவன் (செயலாளர் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடமாகாணம்) மற்றும் சிறப்பு விருந்தினராக திரு சி. ரமணராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் இந்துநாகரீகத்துறை இந்து கற்கைகள்பீடம் யாழ் பல்கலைக்கழகம்) அத்துடன் கௌரவ விருந்தினர்களாக திரு. தி. வரதன் (அதிபர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி) மற்றும் கலாபூசணம் மு. சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறப்பான கலை நிகழ்வுகளோடு கலைஞர் கௌரவிப்பும் இடம்பெற்றது.
- විස්තර
கலாசார விழா - 2019
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார விழா.
- විස්තර
சட்ட ஆவணங்களை வழங்கும் விசேட நடமாடும் சேவை
தேசிய ஒருமைப்பாடு. அரச கரும மொழிகள். சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் சட்ட ரீதியான ஆவணங்களை பொதுமக்களிற்காக இலவசமாக வழங்கும் விசேட நடமாடும் சேவை 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பி.ப 3.30 மணி வரை மல்லாகம் மகா வித்தியாலயத்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ் நடமாடும் சேவையில் பெற்றுக் கொண்ட சேவைகள்
01) பிறப்புச் சாண்றிதழ்களை சட்டரீதியாக மொழி பெயர்த்துக் கொடுத்தல்(ஆங்கிலம்/ சிங்களம் /தமிழ்)
02) பிறப்புச் சாண்றிதழ்களில் உள்ள பிழைகளை அடையாளம் கண்டு திருத்திக் கொடுத்தல்
03) பிறப்புச் சாண்றிதழின் புதிய பிரதியை வழங்குதல்
04) விவாகமாகாத தம்பதியினரை சட்டபூர்வமாக விவாகம் செய்து வைத்தல்
05) பிறப்பு சாண்றிதழ் இல்லாதவர்களிற்கு அனுமான சாண்றிதழ் வழங்குதல்
06) தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுத்தல்
07) அரச காணி தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
08) கமநல சேவை தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
09) ஊழியர் சேமலாப நிதித் தொகை விசாரணைகள், கடன் வசதி பெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
10) சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக இலவச சட்ட உதவி
11) வரிப்பணம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
12) அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
13) ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
14) நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
இச் சேவையின் ஊடாக மக்கள் நிறைவான பயனுள்ள சேவையினைப் பெற்றுக் கொண்டனர்.

- විස්තර


- විස්තර
மயிலிட்டி வடக்கு கிராமச் செயலகம் புதிய கட்டடம் திறப்பு
மீள்குடியேற்றப் பகுதியான மயிலிட்டி வடக்கு பகுதி மக்களின் சேவைகளை நிறைவேற்றுமுகமாக அப்பகுதி மக்களுக்கான கிராமச் செயலகம் 27.08.2019 அன்று பாவனைக்காக திறந்து வைக்கப்பட;டுள்ளது.
இந் நிகழ்வானது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு நா. வேதநாயகன் அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அக் கட்டடத்தினை மக்கள் பாவனைக்காகவும் திறந்து வைத்து உரையாற்றினார்.
இக் கட்டடமானது 6.5 மில்லியன் நிதிப் பங்களிப்பில் UNDP நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பரதேச செயலாளர் திருமதி ச. கோகுலதர்சன் மற்றும் கணக்காளர் ப. கஜேந்திரன் அவர்களும் மற்றும் UNDP நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு. முகுந்தன் அவர்ளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




















