27.07.2026 ஆம் திகதி எமது பிரதேச செயலக முன்றலில் “நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய வேலைத்திட்டம் தேசியக்கொடி ஏற்றி தொடங்கி வைக்கப்பட்டது. அதில் நேர்மையான கலாசாரம் தொடர்பான முன் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டன. உத்தியோகத்தர்களினால் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டு பிரதேச செயலாளரினால் உரை நிகழ்த்தப்பட்டு அது தொடர்பான பதாகைகள் கிளை தலைவர்களிடம் கையளிக்கப்பட்டது.
























