இலவச மருத்துவ முகாம்
மத்திய அரசின் முதியோரகளுக்கான தேசிய செயலகத்தினதும் , சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினதும் இணை அனுசரணையுடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 29.05.2019 காலை 8.30 முதல் 01.00 மணிவரைக்கும் கலைவாணி சனசமூக நிலையம் தந்தை செல்வாபுரத்தில் இடம்பெற்றது. இதில் J/230, J/231 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்நத 100 இற்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். அதுமட்டுமல்லாது இந் நிகழ்விற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுனர் வைத்திய கலாநிதி திரு. சந்திரகுமார் அவர்கள் கலந்துகொண்டு முதிவர்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கான ஆலோசணைகளையும் வழங்கினார். நிகழ்வில் கலந்துகொண்டு கண்ணாடி தேவையான முதியவர்களுக்கு இலவச கண்ணாடிகளும் வழங்கப்பட்டது.





















