2019.04.21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட மிகக்டூரமான குண்டுத்தாக்குதலினால் உயிர் நீத்தவர்களிற்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் காயமடைந்தவர்கள் குணமடைவதற்கான பிரார்த்தனையும்





2019.04.21ம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டிலுள்ள பல பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களினால் நாடளாவிய ரீதியில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் உயிர்நீத்த உள்நாட்டு, வெளிநாட்டு பிரஜைகளிற்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், காயமடைந்தவர்கள் குணமடைவதற்கான பிரார்த்தனையும் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.05.08ந் திகதி காலை நடைபெற்றது. பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து கிறீஸ்தவ மதத்தலைவர்கள், பல சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.















