சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு
நாடளாவிய ரீதியில் புதிய சமுர்த்திப் பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இடம் பெறும் நிகழ்ச்சியின் ஒரு கட்டமாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 4195 பயனாளிகளிற்கு உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வு 05.06.2019 வியாழக்கிழமை தெல்லிப்பளை யூனியன் கல்லுாரியில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலளாளர் திருமதி கோ.சங்கீதா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் அவர்களும் ஏனைய பிரமுகர்களும் சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் முகாமையாளர்களும் உத்தியோகத்தர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




















